×

வேலை வாய்ப்பு முகாம் ஆண்டுதோறும் நடத்தப்படும்... தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் உறுதி

சென்னை: தென்சென்னை அதிமுக  வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் நேற்று காலையில் சோழிங்கநல்லூர் தொகுதி, பெரும்பாக்கம் ஊராட்சி மற்றும் சித்தாலபாக்கம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அவருடன் மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர்கள் பாலு, சங்கர், பகுதி செயலாளர்கள் கே.பி.கந்தன், லியோ. சுந்தரம், மற்றும் மா.தனபால், எம்.சி.முனுசாமி,  பெரும்பாக்கம் ராஜசேகர்,  டி.சி கோவிந்தசாமி, என்.சி. கிருஷ்ணன், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க ராம்குமார், தே.மு.தி.க பிரபாகரன், பா.ஜ.க. மோகன்ராஜா, த.மா.கா. கொட்டிவாக்கம் முருகன்,  சமத்துவ மக்கள் கட்சி பாலகிருஷ்ணன், புதிய நீதி கட்சி ஜெகன், புரட்சிபாரதம் ஆதிவேந்தன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பேசியதாவது: ஊரில் இருக்கும் ஒவ்வொருவருக்கும், அனைத்து உதவிகளைம் செய்துகொண்டிருக்கிறோம். சோழிங்கநல்லூரில் சமீபத்தில் ஆரம்பசுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டது. முழுவீச்சில் அதற்கு தேவையான உபகரணங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான முகாம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.  தொடர்ந்து அடிப்படை வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. துணைமுதல்வரிடம் பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கம்யூனிட்டிஹால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : job camp ,Jayawardena ,AIADMK ,South-west , Jayawardene, candidate, South Chennai
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி